சர்வதேச ரியாலிட்டி ஷோவில் அனிருத்தின் அட்டகாசமான இசை: ஆச்சரிய தகவல்

அனிருத்தின் இசையில் உருவான பாடல் ஒன்று சர்வதேச ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்தப்பட்டுள்ள தகவலை இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’மாரி’. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு தர லோக்கல் பாடல் ஒன்றை தனுஷ் எழுதி பாடி இருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த பாடல் தற்போது பிரிட்டனில் நடைபெற்ற சர்வதேச ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஷோவில் கலந்து கொண்ட மும்பையைச் சேர்ந்த நடன குழு ஒன்று ’மாரி’ படத்தின் பாடலை பயன்படுத்தி அசத்தலாக நடனம் ஆடியுள்ளனர் என்பதும் பிரமிட் போன்று அவர்கள் அந்தரத்தில் தாவித்தாவி ஆடிய நடனம் நடுவர்களை அசர வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்த வீடியோவை இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அனிருத்தின் இசை சர்வதேச அளவில் ரீச் ஆகியுள்ளது இந்த நிகழ்ச்சியில் இருந்து தெரிவதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

சிஎஸ்கே மேட்ச் பார்க்க தோனி அறையை புக் செய்த தமிழ் நடிகர்!

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தொடங்கியது என்பதும் முதல் போட்டியில் அட்டகாசமாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

21 கிலோ எடைக்குறைப்பு: மாநாட்டிற்காக தயாரான சிம்பு!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வந்த 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த

கடிதத்தின் மூலம் அதிபர் ட்ரம்ப்புக்கு விஷம் வைத்தது ஒரு பெண்ணா??? பரபரப்பு சம்பவம்!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு விஷம் (Ricin) படிந்த கடிதம்

போனை திருடிய சிறுவனுக்கு பரிசு வழங்கிய சென்னை போலீஸ்… சுவாரசியச் சம்பவம்!!!

13 வயது சிறுவன் சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் போலீசிடம் மாட்டிக் கொண்டபோது

கொரோனா தாக்கத்தால் சவுதியில் ஆயிரகணக்கான இந்தியர்கள் வேலையிழப்பு… தெருவில் கையேந்திய அவலம்!!!

கொரோனா தாக்கத்தால் சவுதியில் வேலைப்பார்த்து வந்த பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தற்போது வேலை இழந்து தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.