அனிருத்-சிவகார்த்திகேயன் இணைந்த 'எடக்கு மொடக்கு' பாடல்: இணையத்தில் வைரல்

இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் சில பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பாக ’கோலமாவு கோகிலா’ படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண வயசு’ பாடல், ’டாக்டர்’ படத்தில் இடம் பெற்ற ’செல்லம்மா’ மற்றும் ’ஓ பேபி’ ஆகிய பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் அனிருத் இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி உள்ளதாகவும் ’எடக்கு மொடக்கு’ என்று தொடங்கும் இந்த பாடல் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் தகவல் வெளியிட்டு இருந்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் உருவாகிய இந்த எடக்கு மொடக்கு’ பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷ், பவித்ரா லட்சுமி, ஜார்ஜ் நாராயணன், லிவிங்ஸ்டன், இளவரசு, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'மாநாடு' தயாரிப்பாளர் மீது டி.ராஜேந்தர் வழக்கு: என்ன காரணம்?

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றியை சிம்பு, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி உள்பட படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்

நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

நடிகர் சிம்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தாமரையை பேசவிடாமல் திக்குமுக்காட வைத்த கமல்: பிரியங்கா முகத்தில் குஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கிட்டதட்ட அனைத்து நாட்களிலும் தாமரை மற்றும் பிரியங்கா இடையே வாக்குவாதம் நடைபெற்றது என்பதும், டாஸ்க்கின்போது மட்டுமின்றி சாதாரண நேரத்திலும்

நானும் சென்னை தாங்க… ரசிக்க வைத்த தெலுங்கு நடிகரின் மேடை பேச்சு!

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண்

ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல விஜே நடிகை!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் “வணக்கம் தமிழகம்“ எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஐஸ்வர்யா முத்துசிவம்.