கருப்புச்சட்டை போட்டவர்களை எல்லாம் விசாரிக்கும் காவல்துறை: மெரீனாவில் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,September 02 2017]

மருத்துவப்படிப்பு கனவு தகர்ந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த போராட்டத்தீ மெரீனாவுக்கும் பரவிவிட கூடாது என்பதால் நேற்று மாலை முதலே போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மெரினாவில் கருப்புச்சட்டை அணிந்து வருபவர்களையெல்லாம் பிடித்து காவல்துறை விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சாதாரணமாக மெரீனா கடற்கரைக்கு வருபவர்கள் கருப்புச்சட்டை அணிந்திருந்தால் கூட அவர்கள் மீது சந்தேகப்பார்வை படும் அளவிற்கு காவல்துறையினர் கெடுபிடி செய்வதாக மெரீனாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மேலும் ஒரு போராட்டம் ஏற்படாமல் காவல்துறையினர் மூலம் தடுக்க வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையில் ஒருசிறு பகுதியாவது அனிதா போல் இன்னொரு உயிர் போகக்கூடாது என்பதிலும் இந்த அரசு காட்டவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

More News

இளைஞர்களுக்கு கீர்த்திசுரேஷின் பணிவான வேண்டுகோள்

அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து கோலிவுட் நடிகர்கள் பலர் கருத்து கூறி வந்தாலும் நடிகைகளில் ஒருசிலர் மட்டுமே இதுகுறித்து கருத்து கூறியுள்ளனர்.

நீட் ஆதரவு தாய் தற்கொலையின் போது எங்கே போனீர்கள்? எச்.ராஜா

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அனைத்து முயற்சிகளிலும் தோல்வி அடைந்த பின்னர் தனது மருத்துவ படிப்பு என்ற கனவு முற்றிலும் கலைந்ததை தாங்க முடியாமல்தான் நேற்று மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த அரசு யாருக்கான அரசு என்பதே கேள்விக்குறியாக உள்ளது. பா.ரஞ்சித்

மருத்துவ படிப்பு கனவு கலைந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவுக்கு கோலிவுட் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நேற்று ஜி.வி.பிரகாஷ் அரியலூர் சென்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பதை பார்த்தோம், இந்த நிலையில் இன்று 'கபாலி', 'காலா' இயக்குனர் ரஞ்சித் அனிதாவின் உடலுக்கு இறுதி மரியாதை &

ஏழை மாணவியின் எம்பிபிஎஸ் சீட்டுக்கு நேரடியாக தலையிட்ட கேரள முதல்வர்

1176 மதிப்பெண்கள் எடுத்து உயிரையும் கொடுத்த நிலையில் ஏழை மாணவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்காத முதல்வர் மத்தியில் ஏழை மாணவி ஒருவருக்கு சீட் கிடைக்க தானே முன்வந்து உறுதி மொழி கொடுத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்...

இறந்த காலமாகிவிட்டது ஒரு இளந்தளிர். அனிதா குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டதற்கு ஆவேசமாக கண்டனக்குரல் எழுப்பிய நடிகர் கமல்ஹாசன், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதுகுறித்து பேசுகிறார்...