close
Choose your channels

சந்தானம் படத்தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் அஞ்சலி-யோகிபாபு!

Sunday, November 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம், அனைகா நடிப்பில் கார்த்திக் யோகி என்பவர் இயக்கத்தில் கேஎஸ் சினிஷ் என்பவர் தயாரித்த திரைப்படம் ’டிக்கிலோனா’. ஹர்பஜன்சிங், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும், இந்தப் படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த கேஎஸ் சினிஷ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் யோகி பாபு மற்றும் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கிருஷ்ணன் ஜெயராஜ் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

மீண்டும் அஞ்சலி, யோகிபாபு ஆகியோர்களுடன் இணைவதில் தனக்கு மகிழ்ச்சி என தயாரிப்பாளர் கேஎஸ் சினிஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.