close
Choose your channels

பாலியல் புகாரளித்த பெண்....! அநியாயத்திற்கு ஆதாரம் கேட்ட பல்கலைக்கழகம்......!

Thursday, August 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் புகாரளித்தற்கு, ஆதாரம் கேட்டுள்ளது அந்த நிர்வாகம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவிகளுக்கு, அங்குள்ள பேராசிரியர்கள் பாலியல் தொல்லை தருவதாக மாணவி புகார் கொடுத்திருந்தார். புகாரளித்தும் இதுகுறித்து விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-லே பாலியல் புகார் கொடுக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவி வேதனையுடன் கூறியுள்ளார். பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்கும் கமிட்டியிடம் புகார் கொடுத்தோம், ஆனால் அவர்கள் விசாரிக்க மறுத்துவிட்டது கடும் வேதனை அளிக்கிறது என்று அந்தமாணவி கூறியுள்ளார். மேலும் பாலியல் தொல்லை நடந்தது குறித்து ஆதாரம் கேட்டதாக அம்மாணவி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் மட்டுமே, உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கூறியிருந்த நிலையில், அந்த மாணவி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அங்கு அவர் பேராசிரியர்களால் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்தும் மனவேதனையுடன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.