close
Choose your channels

அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை: அதிர்ச்சி காரணம்!

Saturday, December 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் ஒருவர் திடீரென்று விடுதியில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி என்ற பகுதியை சேர்ந்த பொன்ராஜ் என்ற மாணவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கி எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஊருக்குப் புறப்படுவதற்காக அவர் தயாரானபோது திடீரென அவரது வீட்டிலிருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது. அவரது தந்தையார் மாரடைப்பில் இறந்து விட்டதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர் மற்ற மாணவர்கள் புறப்பட்டுச் சென்ற பிறகு விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை செய்து.வருகின்றனர் தந்தை இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவரால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos