close
Choose your channels

'என்னை கொடுமைப்படுத்துகிறார்': 73 வயது மாமனார் மீது புகார் அளித்த 'அண்ணாத்த' நடிகை!

Thursday, July 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

73 வயது மாமனார் தன்னை கொடுமைப்படுத்துவதாக 38 வயது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்த நடிகை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’, ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’நட்பே துணை’ சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் மாங்காடு அனைத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தனது மாமனார் மற்றும் அவரது மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சனா, ‘மனநலம் குன்றிய ஒருவரை எனக்கு திருமணம் செய்து வைத்து தன்னுடைய மாமனார் ஏமாற்றி விட்டார் என்றும் என் கணவர் தற்போது மனநிலை சிகிச்சையில் இருக்கிறார் என்றும் கூறினார். மேலும் தனது மாமனார் சரவணன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து என்னை கொடுமைப்படுத்தி வருகிறார்கள் என்றும் இதற்கு முன்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளேன் என்று எனது புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.