close
Choose your channels

எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல்: 'அண்ணாத்த' படக்குழு செய்யும் மரியாதை!

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில் ’அண்ணாத்த’ படக்குழு மரியாதை செய்ய திட்டமிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அண்ணாத்த’. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பாடல் ரஜினியின் அறிமுகப்பாடல் என்றும் இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடி உள்ளார் என்றும், இந்த பாடல் தான் அவர் பாடிய கடைசி பாடல் என்றும் கூறப்படுகிறது.

எஸ்பிபி அவர்கள் மறைந்த தினத்தில் இந்த பாடலை வெளியிடுவது அவருக்கு செலுத்தும் மிகச்சிறந்த மரியாதையாக இருக்கும் என ’அண்ணாத்த’ பட குழு கருதுகிறது. ஏற்கனவே எஸ்பிபி தனது இசையில் கடைசி பாடலை பாடியுள்ளது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. ’அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் அறிமுக பாடலை தன்னுடைய இசையில் எஸ்பிபி அவர்கள் பாடி இருப்பதாகவும், அவருடைய கடைசி பாடலை கம்போஸ் செய்தது தான் ஆசீர்வதிக்கப்பட்டவராக கருவதாகவும் அப்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது எஸ்பிபியின் கடைசி பாடல் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos