மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்.. போர்ச்சுக்கல் நாட்டில் என்ன நடந்தது?


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் ஏற்கனவே துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியின் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் தற்போது போர்ச்சுகல் நாட்டிலும் கார் ரேஸ் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவித காயமும் இல்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்தின் கார் ரேஸ் அணி துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து, இந்தியாவுக்கே பெருமை சேர்த்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில், அஜித் அணி தற்போது போர்ச்சுகல் நாட்டில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், அஜித்தும் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென விபத்தில் சிக்கினார். இது தொடர்பாக அவர் போர்ச்சுகல் நாட்டின் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, "எனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, நான் என்ன செய்கிறேன் என்பதை அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நன்றியும். இன்று கூட பயிற்சியின் போது எனது கார் விபத்துக்குள்ளானது. கார் பலத்த சேதம் அடைந்தாலும், அந்த காரை மெக்கானிக் குழுவினர் சரி செய்து விட்டனர். மீண்டும் பயிற்சியில் நான் களமிறங்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டில் நடந்த கார் விபத்தில், அஜித்துக்கு எந்த விதமான காயமும் இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com