காசியாபாத்தில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இன்று காசியாபாத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளி ஒருவர் புதிதாக கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
விசாரணையில் அவர் சமீபத்தில் ஈரான் சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனேவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிபடுத்தப்பட்டவர்கள் 29 பேர். இன்று இவரோடு சேர்த்து 30 நபராக எண்ணிக்கை கூடியுள்ளது.
நேற்று நோய்டாவில் பேடிஎம் கம்பெனியினின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதும் அந்த கம்பெனி தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்குமாறு கூறியுள்ளது. மேலும் இரண்டு தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் தங்களது ஊழியர்களை கொரோனா பரிசோதனை செய்துவிட்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.