இன்னொரு பேரழிவு!!! அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 பேர் உயிரிழப்பு!!! அதிர்ச்சி தகவல்!!!

  • IndiaGlitz, [Tuesday,June 02 2020]

 

வட இந்தியாவில் ஏற்பட்ட ஆம்பன் புயலின் தாக்கமே இன்னும் சரி செய்யப்படாத நிலையில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பலருக்குப் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் அனைவரும் அசாம் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களைச் சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அசாம், பூனே போன்ற மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக கடும் மழைப் பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த மழைப்பொழிவினால் அசாம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கின்றன.

நேற்று தெற்கு அசாம் பகுதியில் உள்ள பராக் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கச்சார் பகுதியில் 7 பேரும் ஹைலகண்டி பகுதியில் 7 பேரும் மற்றும் சரிம்கஞ்ச் பகுதியில் 6 பேரும் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களைத் தவிர பலருக்கு படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப் பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. கோல்போரா பகுதி முழுவதும் கடும் நிலச்சரிவினால் பாதிக்கப் பட்டு இருக்கிறது. மேலும், நாகான், ஹோரஜாய் பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் பாதிப்புகள் அதிகம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

நிலச் சரிவினால் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். தற்போது மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அப்பகுதியில் ஏற்பட்ட சரிவுகளை சரிசெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு அளித்த தகவலின் படி இதுவரை 6 பேர் இறந்து விட்டதாகவும் 348 மாவட்டங்கள் தண்ணீர் சூழ்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அம்மாநிலத்தில் ஏற்பட்ட கடும் மழைப் பொழிவினால் 27 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் அழிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

மும்பை: கடந்த இரண்டு வாரங்களில் 4 மடங்காக அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்!!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அமெரிக்காவில் 7 ஆவது நாளாக தொடரும் கறுப்பினத்தவர் போராட்டம்!!!  இராணுவத்தை அழைத்து இருக்கும் அதிபர் ட்ரம்ப்!!!

அமெரிக்காவின் மிணசோட்டா மகாணத்தில் மினியா காவல் நிலையப் பகுதியில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் காவல் துறையினரால் விசாரிக்கப்படும் போது உயிரிழந்தார்.

தலைமை செயலகத்திலும் புகுந்த கொரோனா: 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு எகிறிக் கொண்டே வருவதால்

13 வயது சிறுமியை நரபலி கொடுத்த தந்தை: அதிர்ச்சி காரணம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை அவரது தந்தையே நரபலி கொடுத்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

முதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு கொடுத்த மத்திய அமைச்சர்: பெரும் பரபரப்பு

மத்திய அமைச்சர் ஒருவர் தனது ட்வீட்டில் முதல்வருக்கு அடுத்த இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கொடுத்து இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.