'ஜெயிலர் 2' படத்தில் இணைந்த இன்னொரு நடிகை.. 26 வருடங்களுக்கு முன் நடந்த நாஸ்டால்ஜியா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் "ஜெயிலர்" படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவையிலும், அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், படத்தில் ரஜினியின் "டைகர் முத்துவேல் பாண்டியன்" கதாபாத்திரத்தின் மருமகளாக நடித்த மிர்ணா மேனன் மீண்டும் "ஜெயிலர் 2" படத்தில் இணைந்திருப்பதை நேற்று பார்த்தோம். அதேபோல, தற்போது "டைகர் முத்துவேல் பாண்டியனின்" மனைவியாக முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனும் இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இதை அவர் தனது Instagram பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், படப்பிடிப்பில் நேற்று முன்தினம் கலந்து கொண்டதாகவும், அந்த நாளில் தான் ரஜினியுடன் இணைந்து நடித்த "படையப்பா" படத்தின் 26வது ஆண்டு நிறைவு தினமாக அமைந்தது என்றும், இரண்டும் ஒரே நாளில் நிகழ்ந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது என்றும் தனது நாஸ்டால்ஜியா நினைவலைகளை குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம், "ஜெயிலர் 2" படத்தில் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் உள்ளிட்டோர் மீண்டும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும், முதல் பாகத்தில் நடித்த யோகி பாபு இந்த படத்திலும் அதே டாக்சி டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் செய்திகள் மூலமாக தெரியவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments