கோமதியை அடுத்து சித்ரா பெற்றுத்தந்த தங்கம்: பிரபல நடிகர் வாழ்த்து!

  • IndiaGlitz, [Thursday,April 25 2019]

தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று தந்து நாட்டிற்கே பெருமை சேர்த்த நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த சித்ரா, இன்னொரு தங்கம் நாட்டிற்கு பெற்றுத்தந்துள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்றுடன் முடிந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடைபெற்ற 1500 மீட்ட ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 4 நிமிடம் 14.46 வினாடிகளில் கடந்தார். தங்க மங்கை சித்ரா ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தங்கம் வென்ற சித்ராவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கலையரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'இந்தியாவுக்கு இன்னொரு தங்கம். 1500 மீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்ற சகோதரி சித்ராவுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 4 நாள் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் முடிவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தங்கமங்கை கோமதிக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு கொடுக்கும் காமெடி நடிகர்!

ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் தமிழகத்தின் திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து.

டிக் டாக் செயலி மீதான தடை: மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

டிக் டாக் செயலியில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள் ஆபாசமாகவும் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாலும் அந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது

இவ்வளவு கொலையும் அந்த பொண்ணுக்காகவா? 'கொலைகாரன்' டிரைலர் விமர்சனம்

விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவான 'கொலைகாரன்' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஏழை மாணவி சஹானாவின் 'கனா'வை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்!

சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு வெளியான நிலையில் இந்த தேர்வை எழுதிய தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த சஹானா என்ற மாணவி 600க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார்.

மரக்கூண்டில் இரண்டு குழந்தைகளை அடைத்து வைத்த இரக்கமில்லா பெற்றோர் கைது!

பெற்ற குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பாக வளர்க்கும் பெற்றோர்கள் மத்தியில் ஒருசில பெற்றோர்கள் பெற்ற குழந்தைகளை கொடுமைப்படுத்தும் செய்திகள் தற்போது அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றது