close
Choose your channels

பீட்டர்பாலின் விவகாரத்தில் திடீரென நுழையும் இன்னொரு பெண்: தயாரிப்பாளர் ரவீந்தரின் திடுக்கிடும் தகவல்

Monday, July 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதும் வனிதாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த ஒரு சில நடிகைகள் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் குறித்து வனிதா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் நடந்த சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது என்பதால் தற்போது மீண்டும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இதுவரை வனிதா, எலிசபெத் ஹெலன், சூர்யா தேவி, கஸ்தூரி உள்பட ஒரு சிலர் மட்டுமே இந்த விவகாரத்தில் தலையிட்ட நிலையில் திடீரென தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்கள் சமீபகாலமாக இந்த பிரச்சினை குறித்து அவ்வப்போது காரசாரமான பேட்டி அளித்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் ரவீந்தர் அளித்த பேட்டியில் ’பீட்டர் பால் அவர்களுக்கு ஊர்மிளா ஷர்மா என்பவர் குறித்து தெரியுமா? என்றும், அவர் தற்போது நேபாளில் இருக்கிறார் என்றும், நீங்கள் இன்னொரு பேட்டி கொடுத்தால் அவரை நேரலையில் வரவழைக்க நான் தயார் என்றும், அதன்மூலம் அவர் யார் என்பதை தமிழ்நாடே தெரிந்து கொள்ளும்’ என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே நேற்று துணை இயக்குனர் பிரசாந்த் என்பவர் தனது முகநூலில் பீட்டர் பால் தனது மனைவி என்று தனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இப்போது பீட்டர்பாலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து போராடி வருபவர் இல்லை என்று கூறியதில் இருந்தே இந்த விவகாரம் தலைசுற்ற ஆரம்பித்திருக்கும் நிலையில் திடீரென ஊர்மிளா ஷர்மா என்ற பெண்ணும் இந்த பிரச்சனைக்கு உள்ளே வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் தயாரிப்பாளர் ரவீந்தர், அவர் யார் என்பதை இந்த உலகிற்கு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.