ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக மூத்த அமைச்சர்

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் ஓட்டுமொத்தமாக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் ஒருசில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டுள்ள சசிகலா, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதை தமிழக மக்கள் ஒரு வெறுப்புடனே பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இரண்டு எம்பிக்களும், ஒரு அமைச்சரும் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறி தங்கள் ஆதரவை கொடுத்த நிலையில் தற்போது எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டு வரும் மூத்த அமைச்சரும் அதிமுக செய்தித்தொடர்பாளருமான பொன்னையன் அவர்களும் ஓபிஎஸ் அணிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.

சசிகலா அணியின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி கொண்டு வருவதும், ஓபிஎஸ் அணி நிமிடத்திற்கு நிமிடம் வலுத்து வருவதையும் அரசியல் விமர்சகர்களும், கவர்னர் மாளிகையும், மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எனவே வெகுவிரைவில் ஓபிஎஸ் அவர்கள் நிலையான ஆட்சியை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கூவத்தூரில் சசிகலா சிறைவைப்பா? பொதுமக்கள் கொந்தளிப்பு

சென்னை ஈசிஆர் அருகே உள்ள கூவத்தூர் சொகுசு ரிசார்ட் ஒன்றில் கடந்த நான்கு நாட்களாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டை சுற்றிலும் சசிகலாவின் ஆட்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களது அட்டூழியதால் அப்பகுதி கிராமத்து மக்கள் பெரும் பாதிப்பு அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது...

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உண்ணாவிரதமா? சென்னையில் பரபரப்பு

தமிழகத்தை ஆட்சி செய்வது யார் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஆளுனர் வித்யாசாகர் ராவ், சென்னை வந்து இரண்டு நாட்கள் ஆகியும் எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளார். நேற்று அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டு பின்னர் அது மறுக்கப்பட்டது...

சென்னையில் சுப்பிரமணியன் சுவாமி. ஆளுனரை சந்திக்கின்றாரா?

தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை வந்துள்ளார்...

ஆளுனர் மாளிகையை சுற்றி திடீர் போலீஸ் குவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவருடன் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்...

அதிமுகவை உடைக்க சதி நடக்கிறது. விஜயசாந்தி பேட்டி

பிரபல நடிகையும் தெலுங்கு மாநிலத்தின் அரசியல்வாதியுமான நடிகை விஜயசாந்தி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐதராபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.