தடுப்பூசி வாங்க ரூ.2 லட்சம் டிடி: மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் நிபந்தனை

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகர் மன்சூரலிகான் தடுப்பூசி வாங்குவதற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் ரூபாய் இரண்டு லட்சம் டிடி செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக காலமான அன்று பேட்டியளித்த நடிகர் மன்சூரலிகான் தடுப்பூசியால் தான் விவேக் இறந்தார் என்றும் தடுப்பூசி தேவையில்லை என்றும் தடுப்பூசியை மக்கள் யார் கேட்டார்கள் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்

இதனை அடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தனக்கு முன்ஜாமீன் வேண்டுமென்று மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார்
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ’தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசக்கூடாது என்றும் தடுப்பூசி குறித்து வதந்தி பரப்ப கூடாது என்றும், பதற்றமான சூழ்நிலையை உருவாக்க கூடாது என்றும், அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்

மேலும் தடுப்பூசி வாங்குவதற்காக ரூபாய் இரண்டு லட்சம் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் டிடி செலுத்த வேண்டுமென்று கூறி மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை விதித்து முன்ஜாமீனை நீதிபதி வழங்கினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

'வலிமை' அப்டேட்டே இன்னும் வரல, அதுக்குள்ள 'தல 61' அப்டேட்டா?

தல அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் வெளியான அறிக்கையில்

லாக்டவுன் வருமா? வராதா? பதில் சொல்லுங்க ஆபீஸர்ஸ்: தமிழ் நடிகர் டுவிட்!

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாலசரவணன் 'லாக்டவுன் வருமா? வராதா? பதில் சொல்லு ஆபீசர்ஸ்' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருப்பதியில் கொரோனா தொற்று உறுதியான 1,000 பேர் மாயம்… அதிர்ச்சி தகவல்!

கொரோனா நோய்த்தொற்று சற்றுத் தணிந்து இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனைத்துக் கோவில்களிலும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா வார்டில் சி.ஏ. தேர்வுக்கு படிக்கும் இளைஞர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் தன்னுடைய டிவிட்டரில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு உள்ளார்.

கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு… அறிவிப்பு வெளியிட்ட சீரம்!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.