அதிர்ஷ்டக்காத்து என்றால் இதுதானா? கொடுத்தது 7 லட்சம் ஆனால் கிடைச்சது 2 கோடி?

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

பழங்கால நாணயத்தின் மீது ஆர்வம் உள்ள ஒரு நபர் கனடாவில் ஒரு பழைய பண்ணை வீட்டை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். காரணம் இவரைப்போல நாணயச் சேகரிப்பில் ஈடுபாடு கொண்ட ஒரு ஆசிரியரின் வீடு என்பதால் அங்கு பழைய நாணயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு என்று நம்பினார். உண்மையில் அவரது நம்பிக்கை வீண்போகவே இல்லை. ஆனால் எதிர்ப்பார்த்தற்கு மேல் அங்கு பழைய நாணயங்கள் மட்டுமல்லாது, தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களும் இருந்து இருக்கின்றன. இதனால் ஒரேநாளில் ரூ.2 கோடிக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார்.

அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்பவர் கனடாவில் உள்ள ஆசிரியர் பெட்-ஜோன் ரேக்கின் பழைய வீட்டை ரூ.7 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறார். அந்த வீட்டில் பழைய நாணயங்களை தேடிக் கொண்டு இருக்கும்போது எதிர்பாராத விதமாக தங்கம், வைரம் பதித்த மோதிரம் மற்றும் விலையுயர்ந்த ஆடைகளும் கிடைத்து உள்ளன. இவற்றின் மதிப்பு தோராயமாக ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

இத்தகவலைப் பார்த்த பலரும் அதிர்ஷ்டம் என்பது இதுதானா? என வியப்புற்று வருகின்றனர். காரணம் ஒரே நாளில் 7 லட்சத்தைக் கொடுத்து 2 கோடிக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார். மேலும் பழைய பொருட்களின் மீது ஆர்வம் கொண்ட அலெக்ஸ்ஸுக்கு பழைய பொருட்களும் கிடைத்து இருக்கின்றன.

More News

ஒரு பிளேட் பிரியாணி ரூ.4 லட்சமா?  

சாதாரண பிரியாணி என்றாலே சிலிர்த்துப் நாம் போய் விடுகிறோம். காரணம் அந்த உணவிற்கு மட்டும் அப்படியொரு தனி ருசி.

மிரட்டினாலும் பயப்பட மாட்டேன், ஆதரவு தொடரும்: டெல்லி போலீஸ் வழக்கு குறித்து அமெரிக்க பெண் ஆவேசம்

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா பெர்க் என்பவரும் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்தார்

இசைஞானி இசையில் வெளியாக காத்திருக்கும் படங்கள் எத்தனை தெரியுமா?

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறிய நிலையில் நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் எம்எம் பிரிவியூ தியேட்டர் இருந்த இடத்தில் மிகுந்த பொருட் செலவில்

இந்த கிரிக்கெட் வீரர் போட்ட டுவிட்ட கொஞ்சம் பாருங்க!

மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து சமீபத்தில் பாப் பாடகி ரிஹானா டுவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார்

நயன் - விக்னேஷ் கலந்து கொண்ட விழா: வைரல் புகைப்படம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பதும் விரைவில் இவர்களது திருமணம் நடக்கும் என்பதும் தெரிந்ததே