சிவகார்த்திகேயன் 16 படத்தில் விஷால் பட நாயகி!

  • IndiaGlitz, [Monday,May 06 2019]

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 16 வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என சற்றுமுன் வெளிவந்த செய்தியினை பார்த்தோம்

தற்போது இந்த படத்தின் நாயகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த நடிகை அனு இமானுவேல், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது

சன் பிக்சர்ஸ், சிவகார்த்திகேயன், டி.இமான், பாண்டிராஜ், அனு இமானுவேல் என கச்சிதமான அமைந்துள்ள இந்த கூட்டணியில் இன்னும் ஆச்சரியமான இணைப்புகள் இருக்கும் என்றும் அதுகுறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் சாதனை

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா மே மாதம் 30ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கிவிட்டது.

வாக்காளர்களுக்கு தல மகளின் அன்புக்கட்டளை

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் ஏழு மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.,

'நீயா 2' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: காரணம் இதுதான்!

ஜெய், வரலட்சுமி, கேதரின் தெரசா , ராய்லட்சுமி நடிப்பில் உருவான 'நீயா 2' திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது

இஸ்லாம் மதம் மாறிவிட்டாரா கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி தனது துணிச்சலான அரசியல் மற்றும் சமூக கருத்துக்களால் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறுவார். அதுமட்டுமின்றி சில சமயங்களில் சர்ச்சைகளிலும் அவர் சிக்குவது உண்டு.