ஊரடங்கு நேரத்தில் புகையிலை எப்படி கிடைத்தது? பிரபல நடிகருக்கு நெட்டிசன்கள் கேள்வி

பிரபல பாலிவுட் நடிகரும் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ நெட்டிசன்களால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சத்தால் பல திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்த வீடியோவில் தடை செய்யப்பட்ட போதை மருந்தை அனுராக் உட்கொண்டிருப்பதாகவும் இது சட்டவிரோதமானது என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் மும்பை காவல்துறைக்கு வீடியோவை பகிர்ந்தனர்.

இதற்குப் பதில் சொன்ன அனுராக், ஆமாம் காவல்துறையினரே. அதைப் பாருங்கள். முதலும் கடைசியாகத் தெளிவுபடுத்துகிறேன். நான் புகையிலையைச் சுருட்டிப் பிடிக்கிறேன். தயவுசெய்து நையாண்டி செய்பவர்களின் திருப்திக்காக நன்றாக விசாரித்துக் கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்தார். ஆனாலும் நெட்டிசன்கள் தொடர்ந்து புகையிலையாக இருந்தாலும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் உங்களுக்கு மட்டும் எப்படி புகையிலை கிடைத்தது என்று கேள்வி எழுப்பினர்.

ஒருசிலர் நக்கலுடன் ’நீங்கள் சுருட்டிய புகையிலையை மருந்துக்கடை, காய்கறி கடையில் இருந்து வாங்கினீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். நெட்டிசன்களில் தொடர் கேள்விகளால் அனுராக் காஷ்யப் சிக்கலில் இருப்பதாக தெரிகிறது.

More News

250 மூட்டைகள் அரிசி வழங்கி உதவி செய்த P.T.செல்வகுமார்

கொரோனா அச்சத்தால் வீட்டில் முடக்கியிருக்கும் ஏழை மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து உதவி கரம் நீட்டி வருகிறது.

மே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை

உலகம்; ஊரடங்கு உத்தரவில் நசுக்கப்பட்ட பலரது மனிதஉரிமைகள்!!!

கொரோனா பரவல் தடுப்புக்காக உலகிலுள்ள அனைத்து அரசாங்கங்களும் தங்களது மக்களை ஊரடங்கில் இருக்குமாறு அறிவுறுத்துகிறது.

நலிந்த நடிகர்களுக்கு உதவி: நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியின் அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு காரணமாக நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நலிந்த நடிகர்கள் வறுமையில் வாடுவதால் நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி, நலிந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்கு

மோகன்லாலுக்கும் நடிகை ரேகாவுக்கு என்ன உறவு? பொழுது போகாமல் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி 

24 மணி நேரமும் பிசியாக இருந்த பலர் தற்போது அதே 24 மணி நேரமும் வீட்டில் சும்மா இருக்கின்றனர். வடிவேலு ஒரு படத்தில் கூறியது போல் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை