close
Choose your channels

மகளுக்கு பாஜக தொண்டர் பாலியல் மிரட்டல்: மோடிக்கு நன்றி கூறிய பிரபல நடிகர்

Monday, May 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த பாஜக தொண்டர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் பிரபல நடிகர், இயக்குனர் அனுராக் காஷ்யப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்தவரும் பிரபல பாலிவுட் நடிகர், இயக்குனருமான அனுராக் காஷ்யப், மோடியின் தீவிர எதிர்ப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில் பாஜக தொண்டர்கள் அனுராக் காஷ்யப் மகளை பாலியல் பலாத்காரம் செய்வதாக மிரட்டியுள்ளனர்.

இதனை தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டிய அனுராக் காஷ்யப், 'பிரதமர் மோடி அவர்களே, உங்களது எனது வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். அப்படியே எனது மகளை மிரட்டும் உங்கள் கட்சியின் தொண்டரை சமாளிக்க எனக்கு சொல்லி கொடுங்கள்' என்று பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் இந்த டுவீட்டை பார்த்து மும்பை போலீசார் அனுராக் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அனுராக் காஷ்யப், மும்பை போலீஸ், மகாராஷ்டிரா முதல்வர் , பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.