close
Choose your channels

அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறிய நடிகை: முன்னாள் மனைவியின் திடீர் ஆதரவு!

Monday, September 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த குற்றச்சாட்டை ஏற்கனவே அனுராக் காஷ்யப் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவி ஆர்த்தி பஜாஜ் என்பவர் தனது முன்னாள் கணவருக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் அனுராக்கின் முதல் மனைவி, அனுராக் நீங்கள் ஒரு ராக்ஸ்டார். நீங்கள் வழக்கம்போல தொடர்ந்து பெண்கள் முன்னேற்றத்துக்கு குரல் கொடுங்கள். அவர்களுக்காக பாதுகாப்பான இடத்திற்காக பாடுபடுங்கள். அதை நம் மகள் விஷயத்திலேயே நான் பார்க்கிறேன். உலகில் நேர்மை மறைந்து, மூளை இல்லாதவர்களும் தோல்வி அடைந்தர்களும் நல்லதுக்காக குரல் கொடுப்பவர்களின் ரத்தத்தை கேட்கின்றார்கள். அடுத்தவர்களை வெறுப்பதற்காக அதிக சக்தியை செலவு செய்கின்றனர். அதே சக்தியை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால் இந்த உலகம் அழகிய இடமாக மாறும்.

இவர்கள் செய்வதுதான் நான் பார்த்ததிலேயே மிகவும் மலிவான உத்தி. முதலில் அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், அதன் பின்னர் இது போலியாக கட்டமைக்கப்பட்டது என்பதால் நான் மிகவும் சத்தமாகவே சிரித்தேன். உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது குறித்து எனக்கு வருத்தம் தான். அவர்கள் அவ்வளவுதான். நீங்கள் உயரத்தில் இருந்து தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.