close
Choose your channels

எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்: அனுஷ்கா வேதனை

Friday, February 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. பாகுபலி மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய படங்களில் நடித்த பின்னர் அவர் உலகப் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் அதனால்தான் அவர் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து தற்போது அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து கொண்டு இருப்பதாகவும் விரைவில் அந்த வீரரை அவர் திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்டது. வட இந்தியாவைச் சேர்ந்த அந்த வீரர் தற்போது தென்னிந்தியாவில் உள்ள ஒரு அணியில் ரஞ்சித் போட்டியில் விளையாடி வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த கிசுகிசு குறித்து நடிகை அனுஷ்கா கூறியபோது ’எனக்கு பல முறை ரசிகர்கள் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். முதலில் ஒரு நான் பிரபல நடிகருடன் திருமணம் செய்துவிட்டதாகவும், பிறகு டாக்டர், தொழிலதிபர் என மாறி மாறி எனக்கு திருமணம் செய்து தற்போது கிரிக்கெட் வீரருடன் இணைத்துப் பேசுகிறார்கள். இதுபோன்ற கிசுகிசுக்கள் நடிகைகள் சந்தித்து வருவது சகஜம் தான். முதலில் இதுகுறித்து எனக்கு வருத்தமாக இருந்தாலும் தற்போது பழகிவிட்டது.

எனது திருமண பொறுப்பை முழுக்க முழுக்க எனது பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர் யாரை கை காட்டுகிறாரோ அவரைத்தான் திருமணம் செய்வேன் என்று அனுஷ்கா கூறியுள்ளார். இந்த நிலையில் அனுஷ்கா ஷெட்டி நடித்து முடித்துள்ள ’நிசப்தம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.