விராத் கோஹ்லிக்கு போட்டியாக கிரிக்கெட்டில் களமிறங்கிய அனுஷ்கா ஷர்மா!

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

நட்சத்திர ஜோடிகளான விராத் கோஹ்லி-அனுஷ்கா சர்மா தம்பதிகளில், கிரிக்கெட் விளையாட்டில் விராட் கோலியும், பாலிவுட் திரையுலகில் அனுஷ்கா சர்மாவும் ஜாம்பவான்களாக இருந்து வருகின்றனர் என்பது அறிந்ததே

இந்த நிலையில் தற்போது விராட் கோலியை போட்டியாக கிரிக்கெட்டில் களம் இறங்கி உள்ளார் அனுஷ்கா சர்மா, ஆம், பெண்கள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமி என்பவரது வாழ்க்கை வரலாறு படத்தில் அனுஷ்கா சர்மா ஜுலன் கோஸ்வாமி கேரக்டரில் நடித்து வருகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்து அனுஷ்கா படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த படங்களுக்கு கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள், ‘விராட் கோலிக்கு போட்டியாக அனுஷ்கா சர்மா களமிறங்கிவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் கோஸ்வாமி சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தவர் என்பதும், இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு போஸ்ட் ஸ்டாம்ப் ஒன்றை இந்திய அரசு வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

'திரெளபதி' பட இயக்குனருக்கு அஜித் வாழ்த்து தெரிவித்தாரா? பெரும் பரபரப்பு

சமீபத்தில் வெளியான 'திரெளபதி' பட ட்ரெய்லர் எந்த அளவு சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை

CAA - க்கு விவாதம் கட்டாயம் தேவை.. NRC நாட்டிற்கு தேவையே இல்லை..! நிதிஷ் குமார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்ற அவர், அதனை மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உறுதியாக கூறினார். 

விசாவை தவறவிட்ட இந்திய மாணவி.. தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த பாகிஸ்தான் ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு..!

துபாயில் யு.கே. மாணவர் விசாவை இந்தியப் பெண் காரில் தவறவிட்டார். அவரைத் தேடிச் சென்று விசாவை ஒப்படைத்த பாகிஸ்தான் ஓட்டுனருக்குப் பாராட்டுகள் குவிந்தன.

பிரதமர் மோடியின் CAA கருத்துக்கு பதில் கூற முடியாது.. நாங்கள் அரசியல் மற்றும் மதச்சார்பற்றவர்கள் - ராமகிருஷ்ண மடம்..!

'பிரதமரின் பேச்சு குறித்து நாங்கள் கருத்தேதும் தெரிவிக்க முடியாது. நாங்கள் முற்றிலும் அரசியலற்ற அமைப்பு. இங்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்'"

என் வயது முக்கியமில்லை.. மக்களுக்காக நான் செய்யும் பணி தான் முக்கியம்..! அமித்ஷாவுக்கு ம.பி முதல்வர் பதிலடி.

நாங்கள் எங்கள் பணிகளை நம்புகிறோம். வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதில்லை. மக்கள் என் பணியைத்தான் பார்க்கிறார்களே தவிர, என் வயதை இல்லை.