close
Choose your channels

விஜய்சேதுபதி படத்தின் படப்பிடிப்பில் அனுஷ்கா ஷெட்டி காயம்

Wednesday, June 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'சயிர நரசிம்மரெட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் 'பாகுபலி' புகழ் அனுஷ்கா ஷெட்டி நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடைய காட்சியின் படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட விபத்தால் அவரது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இருப்பினும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த விரும்பாத அனுஷ்கா, படப்பிடிப்பு முடிந்தபின்னர் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் இன்னும் சில வாரங்கள் முழு ஓய்வு தேவை என அறிவுறுத்தியதை அடுத்து காயம் குணமான பின்னர் அவர் விரைவில் மீண்டும் 'சயிர நரசிம்மரெட்டி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுஷ்கா நடித்த 'பாகிமதி' திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மொழிகளில் தயாராகி வரும் 'சைலன்ஸ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.