close
Choose your channels

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது: பிரதமருக்கு அண்டை மாநில முதல்வர் கடிதம்!

Monday, September 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமானதை அடுத்து ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் சோகத்தில் மூழ்கியது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவருடன் பழகிய நாட்கள் மற்றும் மறக்க முடியாத சம்பவங்களை திரையுலக பிரமுகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்

இந்த நிலையில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்பிபி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்றும் திரையுலகினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

குறிப்பாக இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்கள் பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் இருப்பதால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முயற்சி செய்வேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களும் எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் இன்னொரு அண்டை மாநிலமான ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் பல்வேறு சாதனைகள் புரிந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

புதுவை மற்றும் ஆந்திர முதல்வர்களை அடுத்து தமிழக முதல்வரும் விரைவில் எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.