நிறவெறி கொடுமையானது: ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெர்மனி அதிபர்!!!

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

 

அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தொடரும் இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட போராட்டங்களுக்கு உலகம் முழுவதும் ஆதரவு தெரிவிக்கப் பட்டு வந்தன. இந்நிலையில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் நிறவெறி கொடுமையானது எனக் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் தொடரும் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறுவதை எதிர்த்து பல உலகத் தலைவர்கள் அறிவுரை கூறிய நிலையில் தற்போது ஜெர்மனி அதிபர் இனவெறி கொடுமையானது என தெரிவித்து இருக்கிறார். மேலும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களின்போது அதிபரின் அணுகுமுறை எவ்வாறு இருந்தது என்பதையும் செய்தியாளர்கள் கேள்வியாக எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஏஞ்சலா “அது சர்ச்சையான ஒன்று” என்ற கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிபரின் அணுகுமுறை குறித்து தற்போது வெளிப்படையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. கொரோனா விஷயத்தில் அவர் சரியாக செயல்பட தவறிவிட்டார் என்றும் அதேபோல இனவெறிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களிலும் அதிபரின் கருத்து சர்ச்சைக்குரியவை என்றும் விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப் பட்டு வருகின்றன.

More News

மரத்தாலான கை கழுவும் இயந்திரம்: 9 வயது சிறுவனுக்கு ஜனாதிபதி விருது 

கென்ய நாட்டைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மரத்தாலான கை கழுவும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்ததற்காக அந்நாட்டின் அதிபரிடமிருந்து விருதைப் பெற்றுள்ளார் 

இளைஞரின் சிறுநீர் பையில் செல்போன் சார்ஜர்: சுய இன்பத்தால் ஏற்பட்ட விளைவு

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் தெரியாமல் செல்போன் சார்ஜரை விழுங்கி விட்டதாகவும் இதனால் தனக்கு தாங்க முடியாத வயிற்று வலி இருப்பதாகவும் கூறி

சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும் தேதி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே.

இனிமேல் பணம் இல்லை. ஒருவருடத்திற்கு எந்தத் திட்டத்திற்கும் தொகை ஒதுக்க முடியாது: கைவிரித்த நிதிஅமைச்சகம்!!!

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மத்தியஅரசு அதிக நிதியை ஒதுக்கிப் பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டது. இதனால் தற்போது நிதி நெருக்கடி நிலைமை ஏற்பட்டு உள்ளது

தமிழகம் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்: 1500ஐ நெருங்கியதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கொரோனாவின் பாதிப்பு 1500ஐ நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.