தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்… சுவாரசியத் தகவல்!!!

  • IndiaGlitz, [Monday,September 14 2020]

 

சிங்கப்பூரில் ஆப்பிள் நிறுவனம் தனது மூன்றாவது விற்பனை நிலையத்தை தொடங்கியிருக்கிறது. எப்போதும்போல் இல்லாமல் இந்த விற்பனை நிலையம் முற்றிலும் தண்ணீரில் மிதக்க கூடியது என்பதுதான் பெரிய சுவாரசியமே. உருண்மை வடிவம் கொண்ட முற்றிலும் கண்ணாடியால் செய்யப்பட்ட இந்த விற்பனை நிலையம் முழுக்க முழுக்க தண்ணீரில் மிதந்து கொண்டே இருப்பது மாதிரி வடிவமைக்கப் பட்டுள்ளது.

மெரினா பே சாண்ட்ஸ் எனும் பெயரிடப்பட்ட இந்த விற்பனை நிலையத்தில் 23 மொழிகளைப் பேசக்கூடிய 150 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். வாடிக்கையாளர்களிடம் தங்களது பொருட்களைக் குறித்து விளக்குவதற்கு இந்த ஏற்பாடாம். அழகிய உருளை வடிவம் கொண்ட இந்தக் கண்ணாடி கட்டிடத்தில் இருந்து கொண்டு மொத்த சிங்கப்பூரையும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும்.

இதற்காக 114 கண்ணாடி துண்டுகளைக் கொண்டு செங்குத்தாக நிற்கும் 10 தூண்களும் பொருத்தப்பட்டு இருக்கிறது. உள்புறம் ரம்மியமான லைட்னிங் அமைப்புகளுடன் இந்தக் கட்டிடம் காட்சி அளிக்கிறது. உலகின் தொழில் நுட்பத்துறையில் சிறந்து விளங்கும் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவருவதற்கு இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மின்கம்பியை மிதித்த சென்னை பெண் சுருண்டு விழுந்து பலி: வைரலாகும் சிசிடிவி வீடியோ

சென்னையில் தண்ணீரில் கிடந்த மின்கம்பியை மிதித்ததால் 35 வயது பெண் ஒருவர் சுருண்டு விழுந்து மரணம் அடைந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விக்னேஷ் சிவனுடன் கோவா டூர் சென்ற நயன்தாரா: வைரலாகும் புகைப்படங்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக வீட்டை விட்டு வெளியே செல்லாத நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் காதல் ஜோடி, ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும்

சூர்யாவுக்கு எதிராக ஒரே ஒரு நீதிபதி, ஆதரவாக ஆறு நீதிபதிகள் கடிதம்: பெரும் பரபரப்பு

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நீதிமன்றம் குறித்து அவர் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையானது

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்!!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அக்கறையோடு செயல்பட வில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

ஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் மாறுமா டெல்லியின் மோசமான ராசி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் மோசமான சாதனைகளைக் கொண்ட  அணி டெல்லி கேபிடல்ஸ் அணியாகும்.