9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு...! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!

  • IndiaGlitz, [Saturday,April 10 2021]

நடப்பாண்டில் தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக திறனறி தேர்வு நடத்தவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.

கொரோனா காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாது என்ற காரணத்தால் திறனறி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் பொதுத்தேர்வு கிடையாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்திருந்தார்.

ஆனால் மாணவர்கள் கல்வித்திறனில் எந்த அளவிற்கு திறனடைந்துள்ளனர் என்பதை பரிசோதிக்க, முதன்மை கல்வி அலுவலர்கள் சில கேள்விகளை வழங்க உள்ளார்களாம். இந்த கேள்விகள் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பப்பட்டு, திறனறி தேர்வுகள் நடக்கவுள்ளதாம். இதேபோல் 12-ஆம் வகுப்பு மாணவர்களும் புத்தகங்களை படித்து உள்ளார்களா..?என்பதை தெரிந்து கொள்ள இணையம் மூலமாக எளிமையான கேள்வி கேட்கப்படுகின்றன.

மேலும் பொதுத்தேர்வு இல்லாத காரணத்தால், மாணவர்களுக்கு படிப்பின் மீதுள்ள ஆர்வமும்,கல்வித்திறனும் குறையாமல் இருக்க 9,10 வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வுகள் நடைபெறுகின்றது. வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாள்கள் அனுப்பப்பட்டு, இணையம் மூலமாக தேர்வு நடக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் திறனறி தேர்வில் சரியான விடையளிக்காவிட்டால் தேர்ச்சியா..?தேர்ச்சி இல்லையா..? என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளிவரவில்லை.


 

More News

கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி… அதிர்ச்சி சம்பவம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 3 பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

மனசார சொல்றேன், நல்லா வருவ.. : மனம்திறந்து விஜய்சேதுபதி பாராட்டிய வீடியோ!

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தைப் பார்த்த பிரபல நடிகர் ஒருவர் இயக்குனர் மாரி செல்வராஜை பார்த்து 'மனம் திறந்து சொல்றேன் நீ நல்லா வருவ' என்று பாராட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பப்ஜிக்கு அடிமையான இளைஞர் நிஜத்தில் துப்பாக்கியைத் தூக்கியச் சம்பவம்… 2 பேர் உயிரிழப்பு!

சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி அதனால் மனஅழுத்தத்தோடு இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

10 ரூபாய் டாக்டர் மறைவு....! ஊரே சேர்ந்து செய்த இறுதிச்சடங்கு...!

பழைய வண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்து வந்த மருத்துவர் கோபாலன் உடல்நலக்குறைப்பாடு உயிரிழந்தார்.

ஃபைனல்ஸ்ல்ல கூட காரக்குழம்பு தானா? கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி வேற லெவலில் மக்களை சென்றடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சி போல் இதுவரை எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியும் புகழ் பெற்றதில்லை