நாகேஷுடன் நடித்த காட்சி: மலரும் நினைவுகளை பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் 

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக அவர் இயக்கிய ’ஏழாம் அறிவு’ ’துப்பாக்கி’ ’கத்தி’ உள்ளிட்ட படங்களில் அவர் ஓரிரு காட்சிகளில் தோன்றுவார் என்பதும் அந்த காட்சியை கண்டுபிடித்து ரசிகர்கள் கை தட்டி மகிழ்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் இயக்குனராகும் முன்னதாகவே ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்து உள்ளதாக கூறி அந்த மலரும் நினைவுகளின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏஆர் முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’பூச்சூடவா’. அப்பாஸ் மற்றும் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தை உதயசங்கர் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு வசனம் எழுதும் பணியை ஏஆர் முருகதாஸ் ஏற்றுக் கொண்டதாகவும் அப்போது அவருக்கு ஒரு சிறு கேரக்டரை இயக்குனர் கொடுத்ததாகவும் தெரிகிறது.

நாகேஷ் மற்றும் சிம்ரன் நடித்துள்ள அந்த காட்சியில் சர்வராக தோன்றும் ஏஆர் முருகதாஸ், நாகேஷ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் காட்சியின் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

More News

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் ஜுன் 7 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீடிக்கலாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்து இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.

இலவச உணவை அடுத்து 'குக் வித் கோமாளி' தர்ஷாவின் அடுத்த சமூக சேவை!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'கள் மற்றும் கோமாளிகள் வேற லெவலில் பிரபலம் அடைந்தார்கள் என்பது தெரிந்தது.

வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று… அதிர்ச்சித் தகவல்!

சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சகோதரரா இவர்? குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி என்பதும் 'பாகுபலி' உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பொதுநலன் வழக்கு தாக்கல் செய்த ரஜினி பட  நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம்!

பொதுநல வழக்கு தொடர்ந்த பிரபல நடிகைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ரூபாய் 20 லட்சம் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது