வளர்ந்து வாங்க.. 'ரமணா 2' எடுப்போம்.. கேப்டன் மகனுக்கு வாழ்த்து கூறிய ஏஆர் முருகதாஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த ’படைத்தலைவன்’ என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இயக்குனர் ஏஆர் முருகதாஸ், "சீக்கிரம் வளர்ந்து வாங்க, ‘ரமணா 2’ எடுப்போம்" என்று கூறியதை அடுத்து, ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் அடைந்துள்ளனர்.
சண்முக பாண்டியன் நடிப்பில் அன்பு இயக்கத்தில் உருவான திரைப்படம் ’படைத்தலைவன்’. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது, நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், முனீஷ்காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ.வெங்கடேஷ், யூகிசேது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. அதில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசிய போது, "இவ்வளவு ஒரு கம்பீரமான கதாநாயகன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வளர்ந்து வாங்க, ‘ரமணா 2’ எடுப்போம். திருப்பியும் நாம் கேப்டனை காட்டுவோம். இந்த படம் ரொம்ப அற்புதமாக இருக்கிறது. யானையை ஒரு சிங்கத்துடன் வைத்து எடுத்தது போல் இருக்கிறது," என்று கூறினார்.
’கள்ளழகர்’ திரைப்படத்தில் கேப்டன் யானையுடன் நடித்திருந்தார். அப்போது ஒரு பேட்டியில் அவர் கூறிய போது, "யானையை ஒரு குழந்தை மாதிரி நான் உணர்கிறேன். நான் கூட ஒரு யானை வாங்கலாம் என்று நினைக்கிறேன்," என்று கூறியிருந்தார். அது தற்போது எனக்கு ஞாபகம் வருகிறது, என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.
இந்த பேச்சிலிருந்து விரைவில் ‘ரமணா 2’ உருவாகும் என்றும், அதில் சண்முக பாண்டியன் நடிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் அந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com