close
Choose your channels

15 வருடத்தில் இப்படி ஒரு ரஜினியை யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள்: ஏஆர் முருகதாஸ்

Saturday, December 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:

தர்பார் படத்தில் என்னுடன் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். குறிப்பாக கலை இயக்குனர் சந்தானம் அவர்கள் நான் மனதில் என்ன நினைக்கிறேனோ அதை அப்படியே செட் போட்டுக் கொடுத்துவிடுவார்

அதேபோல் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் அவர்கள் வெறும் தொகுப்பாளராக மட்டுமின்றி ஒரு திரைக்கதை ஆசிரியராகவும் மாறினார். ஒவ்வொரு ஷாட்டிலும் இந்த ஷாட்டில் இன்னும் என்ன தேவை என்றும் என்னிடம் கேட்டு கேட்டு வாங்கி படத்தொகுப்பு செய்ததிலிருந்து அவருடைய பணியின் அர்ப்பணிப்பு திறன் எனக்கு புரிந்தது
அதேபோல இயக்குனர்கள் அன்பரிவ் அவர்கள் இந்த படத்தில் மிக சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் சண்டை காட்சி கடந்த 15 வருடங்களில் இதுவரை ரஜினியின் ஸ்டண்ட் காட்சியை யாரும் பார்த்திராத வகையில் உருவாக்கி இருக்கிறோம் என்பதை என்னால் பெருமையுடன் சொல்ல முடியும். அந்த அளவிற்கு ரஜினி அவர்கள் டூப் இன்றி மிகச் சிறப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார்

நான் சின்ன வயதில் ரஜினி அவர்களை திரையில் பார்த்து தான் வளர்ந்தேன். அவரை தியேட்டரிலேயே தேடிய காலமும் உண்டு. அப்படிப்பட்ட நான் என்று ரஜினி அவர்கள் பக்கத்தில் நின்று அவரை இயக்குகிறேன் என்றால் என்னால் சுத்தமாக நம்பவே முடியவில்லை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.