லைகா நிறுவனத்துடன் மீண்டும் இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்

  • IndiaGlitz, [Wednesday,May 24 2017]

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம்தான் லைகா நிறுவனம் கோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்தது. இந்த படத்தை அடுத்து லைகா நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' உள்பட பல படங்களை தயாரித்து வருகிறது. கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'மருதநாயகம்' படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள 'தளபதி 62' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'இப்படை வெல்லும்' என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடவுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'இப்படை வெல்லும்' படத்தை கவுரவ் நாராயணன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவும், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

More News

உதட்டு முத்தக் காட்சியில் சிபிராஜ் நடிக்க மறுத்தது ஏன்? இயக்குனர் விளக்கம்

விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தற்போது சிபிராஜ் நடித்து வரும் 'சத்யா' என்ற படத்தை இயக்கி வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடம் அனுமதி பெற்று 'சத்யா' டைட்டிலை பெற்ற படக்குழுவினர் தற்போது படப்பிடிப்பை விறுவிறுப்புடன் நடத்தி வருகின்றனர்...

பிரபல ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் காலமானார்.

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்றாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்கள் புகழின் உச்சத்தை அடைவார்கள் என்பது உறுதி. அந்த வகையில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர்களில் ஒருவரான ரோ

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு, பாடதிட்டம் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் இனிமேல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த இரண்டு வகுப்புகளிலும் ஒவ்வொரு பாடத்திலும் 100 மதிப்பெண்களைக் கணக்கிட்டு, சராசரி அடிப்படையில் ஒரே சான்றிதழ் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.

சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்பட 8 முன்னணி நடிகர்களுக்கு கைது வாரண்ட்

கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் செய்தி ஒன்று பிரபல பத்திரிகையில் வெளியானது.

நடிகை ஸ்ரீதேவியின் 50 வருடங்களும், 300வது படமும்...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது அழகாலும் வசீகரத்தாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி திரையுலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ளது.