'கோப்ரா' பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டையும் பரிசையும் பெற்ற மாற்றுத்திறனாளி சிறுமி

ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியான உடன் அந்த பாடல்களை அச்சு அசலாக அப்படியே பாடி சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருவது கடந்தசில வருடங்களாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை அச்சு அசலாக பாடிய மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி என்பவர் இசையமைப்பாளர் டி.இமானின் பாராட்டைப் பெற்றதோடு தற்போது அவர் திரையுலகில் பாடகராகவும் மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ’கோப்ரா’ என்ற படத்தில் இடம்பெற்ற ’தும்பி துள்ளல்’ என்ற பாடல் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான இந்த பாடல் அனைவராலும் பாராட்டப்பட்டு மில்லியன்கணக்கான பார்வையாளர்களை பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த பாடலை நேற்று கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி சிறுமி சஹானா என்பவர் தனது கீபோர்டு மிக அழகாக வாசித்து, அதனை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். ஏற்கனவே இவர் ஜீ தமிழ் சேனலில் சரிகமபா என்ற நிகழ்ச்சியில் இரண்டாவதாக இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கீபோர்டில் வாசித்த இந்த பாடல் சில நிமிடங்களில் டுவிட்டரில் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்தது

இந்த நிலையில் நேற்று தற்செயலாக இந்த வீடியோவை பார்த்த ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது டுவிட்டரில் ஸ்வீட் என பாராட்டு தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த இந்த சிறுமியின் வீட்டிற்கு நேராக சென்ற ’கோப்ரா’ தயாரிப்பாளர் லலித்குமார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சார்பாகவும் தனது சார்பாகவும் சிறுமி சஹானாவுக்கு விலையுயர்ந்த மைக் உள்ளிட்ட ஸ்டூடியோ கட்டமைப்பை பரிசாகக் கொடுத்தார். இந்த பரிசை பெற்றுக் கொண்ட சஹானா லலித்குமாருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி தெரிவித்தார். சஹானாவின் இசைதிறமைக்கு அவர் விரைவில் திரைப்பட பின்னணி பாடகியாகவோ, இசையமைப்பாளராகவோ மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது

More News

கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்த விஜய் பட நடிகை!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இவர் அதன் பின்னர் விஜய் நடித்த 'வேலாயுதம்' மற்றும் 'சச்சின்' ஆகிய

தூத்துக்குடி: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு!!!

தூத்துக்குடி மாவட்டம் கீழசெக்காரக்குடி பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்தனர்

சமந்தாவை ஸ்பைடர்மேன் லெவலுக்கு கொண்டு சென்ற ரசிகர்கள்!

திருமணத்திற்கு பின்னரும் மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகை சமந்தா, தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்

சாத்தான்குளம் கொலை வழக்கு: CBI க்கு ஏன் அத்தனை சிறப்பு??? CBI விசாரணையில் என்ன வித்தியாசம்???

சாத்தான் குளம் (ஜெயராஜ், பின்னிக்ஸ்) கொலை வழக்கு  விசாரணை தற்போது சி.பி.ஐ. க்கு மாற்றப் பட்டு இருக்கிறது

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி: 29 வயது இளைஞர் கைது

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகள் 'போக்சோ' சட்டம் போட்டு குறையாத நிலையில் தற்போது தமிழகத்தில் 7 வயது சிறுமியை 29 வயது கொடூரன் பாலியல் பலாத்காரம்