காருக்கு பிரத்யேகமாக இசையமைத்து காசும் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. அசத்தல் தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், தான் விரும்பிய எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளதாகவும், அந்த காருக்காக பிரத்யேகமாக இசையமைத்து அதற்கான விலையையும் கொடுத்துள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், சற்று முன் சிவப்பு நிற எலக்ட்ரிக் காருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில் கேப்ஷனாக ’இந்தியாவில் எனக்கு பிடித்த எலக்ட்ரிக் காரை நான் வாங்கி விட்டேன். இந்த காருக்காக நான் ஒரு பிரத்தியேக சப்தத்தை உருவாக்கியுள்ளேன். அதற்கான விலையையும் கொடுத்துள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.
டால்பி அட்மாஸ் என்ற தொழில்நுட்பத்தில் அந்த சப்தத்தை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, அவரது புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு இதுவரை சுமார் 4 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com