இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?


Send us your feedback to audioarticles@vaarta.com


இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இன்று திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி, அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதனால் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவர்கள், அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. எனினும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஏ.ஆர். ரகுமான் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments