ஆஸ்கார் விருது தொலைந்துவிட்டதா? ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பகீர் தகவல்!

சமீபத்தில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது ஆஸ்கார் விருதுகள் தொலைந்து விட்டதாகவும் அதன்பின்னர் உடனடியாக கிடைத்து விட்டதாகவும் பகீர் தகவல் ஒன்றை கூறியுள்ளார். 

கடந்த 2009ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்தில் ஒரிஜினல் ஸ்கோர் செய்ததற்காக ஒரு விருதும் அதே படத்தில் இடம்பெற்ற ’ஜெய்ஹோ’ என்ற பாடலுக்காக இன்னொரு ஆஸ்கார் விருதும் கிடைத்தது. 

இந்த ஆஸ்கார் விருதுகள் அவருடைய தாயாரின் வீட்டில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த விருதை தன்னுடைய தாயார் தங்கம் என நினைத்து ஒரு துணியில் சுற்றி அலமாரியில் பாதுகாப்பாக வைத்து இருந்ததாகவும் அவர் பேட்டியில் கூறினார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாயார் காலமானார். இதனையடுத்து ஆஸ்கார் விருதுகளை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து வர ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்ததாகவும், அப்போது அவரது தாயார் வீட்டில் விருதுகளை தேடியபோது கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், ஒருவேளை விருதுகள் தொலைந்துவிட்டதோ என நினைத்த நேரத்தில் தான் அவரது மகன் இன்னொரு அலமாரியில் அந்த விருதுகள் இருந்ததை கண்டு பிடித்ததாகவும் இந்த பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பேட்டி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

பாடல்களே இல்லாத படத்தில் வாணிபோஜன்: ஹீரோ யார் தெரியுமா?

பாடல்களே இல்லாமல் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் நாயகியாக வாணிபோஜன் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் நடித்து வருகிறார் 

நயனுடன் கொச்சிக்கு பறந்த விக்னேஷ் சிவன்: என்ன விசேஷம்?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படத்தில் ஒன்றாக பணிபுரிந்ததிலிருந்து காதலர்களாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்

துபாய்க்கு ஜாலி பயணம் செய்த பிக்பாஸ் காதலர்கள்: வைரல் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் காதலர்களாக மாறிய ஜோடி தற்போது ஜாலி பயணமாக துபாய் சென்றுள்ளதன் புகைப்படம் வைரலாகி வருகிறது

நேற்று சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 189 ரன்கள்

குஷ்பு வீட்டிற்குள்ளும் புகுந்த கொரோனா பாதிப்பு: பிரார்த்தனை செய்ய குஷ்பு வேண்டுகோள்

நடிகை குஷ்புவின் கணவரும் பிரபல இயக்குனருமான சுந்தர் சி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது