500 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் இசையமைக்கும் ஏஆர் ரஹ்மான்? படப்பிடிப்பு தொடக்கம்..!

  • IndiaGlitz, [Friday,April 05 2024]

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

இதிகாச புராணங்களில் ஒன்றான ’ராமாயணம்’ படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தில் ராமர் கேரக்டரில் நடிக்கும் ரன்பீர் கபூர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டு ராமாயணம் படத்திற்காக போடப்பட்ட செட்டை காண்பித்துள்ளார். மேலும் படப்பிடிப்பின் முதல் நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக தெரிகிறது.

ராமர் கேரக்டரில் ரன்பீர் கபூர், சீதை கேரக்டரில் சாய் பல்லவி மற்றும் ராவணன் கேரக்டரில் யாஷ் நடிக்கும் இந்த படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் தற்போது போடப்பட்டிருக்கும் செட் மட்டுமே 11 கோடி மதிப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் மூன்று பாகமாக உருவாக இருப்பதாகவும் ராமரின் இளமை பருவம், சீதை திருமணம், அதன் பின்னர் சீதை இலங்கைக்கு கடத்தல் ஆகியவை மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய திரை உலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ரஷ்யாவுக்கு அல்ல.. திடீரென வேறொரு நாட்டிற்கு கிளம்பி சென்ற விஜய்.. 'கோட்' அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இல்லையா? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என சின்ன குழந்தைக்கு கூட தெரியும் நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பிரபல நடிகை ஒருவர்

மீரா ஜாஸ்மின்  வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..!

நடிகை மீரா ஜாஸ்மின் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகத்தை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நல்லவர்கள், கெட்டவர்கள், சூப்பர் ஹீரோ.. 'ரத்னம்' படத்தின் கதையை ஓப்பனாக கூறிய ஹரி..!

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'ரத்னம்' திரைப்படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவலை ஹரி ஓப்பனாக கூறியுள்ளார்

'விடாமுயற்சி' அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது? ரிலீஸ் எப்போது? சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 60% மட்டுமே முடிவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.