close
Choose your channels

டிரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில் இந்த இரண்டு நாட்களில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில் நேற்று இரவு நடந்த குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விருந்துக்கு பின்னர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்களை இந்திய தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா மற்றும் மகள் இவாங்கா, மருமகன் ஆகியோர்களுக்கு நேற்றிரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் ஒருசில மாநில முதலமைச்சர்கள் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்

இந்த நிலையில் இந்த விருந்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டிரம்புக்கு அறிமுகப்படுத்திய உடனே அவருடன் கைகுலுக்கிய டிரம்ப், ரஹ்மானிடம் சில வினாடிகள் பேசிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.