close
Choose your channels

பரபரப்பான இந்தி சர்ச்சைக்கிடையில் ஏ.ஆர்.ரஹ்மானின் அசத்தல் பதிவு!

Saturday, April 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடு முழுவதும் ஹிந்தி மொழி குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது .

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேசிய போது ’மாநிலங்களுக்கு இடையே உள்ள மக்களுக்கு ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு பதிலாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல பிரமுகர்கள் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் ’தமிழணங்கு’ என்றும் ’இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற பாரதிதாசனின் வாசகத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கையில் ’ழ’கரத்தை ஏந்திக்கொண்டு பெண் ஒருவர் துள்ளிக் குதிப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் அவர் தனது வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

‘தமிழணங்கு’ என்பதற்கு ’தமிழ் தேவதை’ என்ற பொருள் கூறும் வகையில் ஏஆர் ரஹ்மான் பதிவு செய்த இந்த பதிவு, இந்தியை ஆதரிப்பவர்களுக்கான பதிலடியாக உள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.