close
Choose your channels

மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்த பிரபலங்கள்.. அசத்தல் பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்..!

Wednesday, April 16, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மீது திரையுலக பிரபலங்கள் சிலர் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கு அசத்தலான பதிலை அவர் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மான் எந்த ஒரு புதிய டெக்னாலஜி அறிமுகமானாலும், அதனை தனது ஸ்டூடியோவில் பயன்படுத்தி விடுவார் என்பதும், குறிப்பாக ஷாகுல் ஹமீத் போன்ற மறைந்த பாடகர்களின் குரலை சில திரைப்படங்களில் பயன்படுத்தினார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், மறைந்த பாடகர்களின் குரலை AI தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்துவதற்கு பதிலாக, புதிய பாடல்களுக்கு வாய்ப்பு தரலாம் என்று விமர்சனம் எழுந்துள்ளது. சமீபத்தில் கூட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், "ஏகப்பட்ட பாடகர்கள் இருக்கும்போது எதற்காக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாடலை உருவாக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேபோல், பாலிவுட் பாடகர் அபிஜித், ஏ.ஆர். ரகுமான் பாடகர்களுக்கும் இசைக்கருவி வாசிப்பவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்காமல், AI தொழில்நுட்பத்தை" வைத்து இசையமைப்பு செய்வது அவர்களுடைய வாய்ப்பை பறிக்கிறது என்று விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், “பாடகர் அபிஜித்துடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது, இன்னும் அவர் மீது எனக்கு அன்பு இருக்கிறது” என்றும் கூறினார். அதே நேரத்தில், “அவர் என்னைப் பற்றி கூறியது அவருடைய கருத்து, அதை நான் மதிக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், AI தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகத்தான் நான் பயன்படுத்துகிறேன். தவிர, பாடகர்களுக்கு மாற்றாக அதை எப்போதும் பயன்படுத்த எண்ணியது இல்லை. உண்மையில், பாடகர்களின் திறமையான குரல் நுட்பங்களை AI தொழில்நுட்பம் செய்து விட முடியாது.

துபாயில் 60 பெண்கள் கொண்ட பெரிய இசைக் குழுவை அமைத்திருக்கிறேன். 'பொன்னியின் செல்வன்' உள்பட சில படங்களில் 200 முதல் 300 இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளேன். எனவே, இசைக்கலைஞர்களுக்கும் பாடகர்களுக்கும் வாய்ப்புகளை பறிக்கிறேன் என்பது பொய்யான குற்றச்சாட்டு.

நான் அதிக அளவில் வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதை வெளியே சொல்வதில்லை” என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment