close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' பின்னணி இசை குறித்து மாஸ் தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

Wednesday, March 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பின்னணி இசை குறித்த மாஸ் தகவலை வெளியிட்டதை அடுத்து அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் குறிப்பாக பின்னணி இசை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் ஒரு புதிய இசை ஸ்டூடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்தார் என்பதை பார்த்தோம். அந்த ஸ்டூடியோவில் தான் தற்போது ’பொன்னியின் செல்வன்’ படத்தின் பின்னணி இசைஅமைத்து வருவதாக ஏஆர் ரஹ்மான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் அவர்களை துபாய்க்கு அழைத்ததாகவும் துபாயில் இருவரும் முக்கிய காட்சிகளின் பின்னணி இசை குறித்து ஆலோசனை செய்து கம்போஸ் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.