close
Choose your channels

இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எரிச்சலூட்டுகிறது: ஏ.ஆர்.ரஹ்மான்

Tuesday, February 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரீமேக் செய்வது போலவே பழைய சூப்பர் ஹிட் பாடல்களை ரீமேக் செய்வது கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் வழக்கமாக உள்ளது.

ஆனால் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை பொருத்தவரை பெரும்பாலும் அவரது பாடல்களில் ரீமேக் என்பது இருக்காது என்பதும் இருப்பினும் இயக்குனர்களை வேண்டுகோளுக்கிணங்க ஒரு சில திரைப்படங்களில் அவர் ரீமேக் பாடல்களை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே.சூர்யா நடித்த ’நியூ’ என்ற படத்திற்காக ’தொட்டால் பூ மலரும்’ என்ற பாடலையும் விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ என்ற படத்திற்காக ’பொன்மகள் வந்தாள்’ என்ற பாடலையும் அவர் ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் ’ஓகே கண்மணி’ படத்தில் ’பம்பாய்’ படத்தின் பாடலான ‘அந்த அரபிக் கடலோரம்’ பாடலை இயக்குனரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் ரீமேக் செய்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ’ஸ்ட்ரீட் டான்ஸர்’ என்ற திரைப்படத்திற்காக ’முக்காபுலா என்ற பாடலை ரீமேக் செய்யும் உரிமையை பிரபுதேவாவுக்கு ஏஆர் ரஹ்மான் கொடுத்தார். இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளிக்கையில் ’தன்னுடைய பாடலை தானே ரீமிக்ஸ் செய்வது என்பது எரிச்சலான விஷயம் என்றும் புதிய பாடல்களை இசை அமைக்கவே பெரும்பாலும் தனக்கு ஆர்வம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பல பாடல்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் ஏஆர் ரஹ்மானின் இந்த பதில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.