சிம்புவுக்கு குரல் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நடிகர் சிம்புவுக்காக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஒரு பாடல் பாடி இருப்பதாகவும் இந்த பாடல் வரும் சுதந்திர தினத்தில் வெளியாகும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாக இருப்பதாகவும் இந்த பாடலை ஏஆர் ரஹ்மான் பாடி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பாடல் இசை ரசிகர்களுக்கும் சிம்பு மற்றும் ரஹ்மான் ரசிகர்களுக்கும் விருப்பத்திற்குரிய பாடலாக இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

அதுமட்டுமின்றி செப்டம்பர் 1ஆம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தை அடுத்த மாதம் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டது

வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடவுள்ள இந்த படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பது தெரிந்ததே.

More News

என் அம்மா பாடிய மாஸ் பாடல்: பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட வீடியோ

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் தனது அம்மா பாடிய மாஸ் பாடல் குறித்த வீடியோவை தனது சமூக தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

தனுஷின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' ஆஜித்: வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆஜித், தனுஷ் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியிலும் இந்த படம் ரீமேக் செய்யப்படும்: எஸ்.ஜே.சூர்யா அறிவிப்பு!

எஸ்ஜே சூர்யா நடித்த திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் கண்டிப்பாக ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் என்று கூறியுள்ளார்

திமுக கமல்ஹாசனை விலைக்கு வாங்கியுள்ளது: சினேகனின் குற்றச்சாட்டுக்கு நடிகை ஜெயலட்சுமி பதில்!

 சமீபத்தில் பாடலாசிரியர் சினேகன் தான் நடத்திவரும் அறக்கட்டளையின் பெயரில் தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி நடத்தி அதன் மூலம் பணம் வசூல் செய்து வருவதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

15 வருடங்களுக்கு முன்பும் இப்போதும்:  இரு பிரபலங்களுடன் மகத் இருக்கும் புகைப்படம் வைரல்! 

 இரண்டு பிரபலங்களுடன் 15 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப் படமும் அதே பிரபலங்களுடன் தற்போது எடுத்த புகைப்படத்தையும் நடிகர் மகத் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.