close
Choose your channels

யார் கொடுத்த உரிமை.. அமைச்சர் அன்பில் மகேஷுக்கு அறந்தாங்கி நிஷா விடுத்த கோரிக்கை..!

Saturday, April 5, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சத்துணவு ஊழியர்கள் துடைப்பதால் ஐந்தாம் வகுப்பு மாணவனை அடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் இது யார் கொடுத்த உரிமை என்று விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு விடுத்த கோரிக்கையில் அந்த பெண்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு முட்டை கேட்டதற்காக ஐந்தாம் வகுப்பு மாணவனை சத்துணவு பெண் பணியாளர்கள் துடைப்பத்தால் அடித்து விரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அறந்தாங்கி நிஷா இது குறித்து கூறியிருப்பதாவது:

ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சத்துணவு முட்டை கேட்டதற்கு 5 ம் வகுப்பு மாணவன் சமையல் செய்பவர்களால் தக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்கு உரியது. ஆசிரியர்கள் அடிப்பது மாணவன் நல்வழிக்காக, இவர்கள் எப்படி மாணவன் மீது கைவைக்க முடியும், யார் கொடுத்த உரிமை, மரியாதைக்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் பணி நீக்கம் மட்டும் அல்ல உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment