'அரண்மனை 4' ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பா? சோலோவாக ரிலீஸ் ஆகிறதா விஷாலின் 'ரத்னம்'?

  • IndiaGlitz, [Thursday,April 18 2024]

ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் நடித்த ‘ரத்னம்’மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ’அரண்மனை 4’ திரைப்படம் ஒரு வாரம் தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவில்லை என்ற நிலையில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஏப்ரல் 26 ஆம் தேதி ’ரத்னம்’ மற்றும் ’அரண்மனை 4’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்று வந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் திடீரென ’அரண்மனை 4’ திரைப்படம் மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து விஷாலின் ’ரத்னம்’ படம் மட்டும் ஏப்ரல் 26ஆம் தேதி சோலோவாக ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரிலீஸ் தினத்தன்று தான் ’சந்திரமுகி 2’ ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென ’சந்திரமுகி 2’ ரிலீஸ் தேதி தள்ளி போனதால் ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் மட்டுமே ரிலீஸ் ஆனது. அதேபோல் தற்போது ’ரத்னம்’ படம் போட்டியின்றி தனியாக ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியதற்கு இதுதான் காரணம்: யுவன்ஷங்கர் ராஜா விளக்கம்..!

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென இன்று முடங்கியதாக வெளியான தகவலை அடுத்து அவரை அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ஜாதக தோஷங்கள் மற்றும் யோகங்கள் - ஜோதிடர் Soorth Babu விளக்கம்

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் ஜோதிடர் மற்றும் ஆன்மீக ஞானி திரு. Soorth Babu அவர்கள் அளித்த பேட்டி, ஜோதிடத்தின் ஆர்வலர்களை கவர்ந்தது.

ஏ.ஆர்.ரகுமானின் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம்.. இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு..!

தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை

திடீரென காணாமல் போன யுவன்ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம்.. என்ன நடந்தது?

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென டெலிட் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்துவிட்டார்கள்: மன்சூர் அலிகான் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!

வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று திடீரென பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்