செக்க சிவந்த வானம்: அரவிந்தசாமி கேரக்டர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,August 13 2018]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக நடந்து வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள நான்கு முன்னணி நடிகர்களான அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகியோர்களின் கேரக்டர்கள் குறித்த 4 லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சற்றுமுன் அரவிந்தசாமியின் கேரக்டர் 'வரதன்' என்ற அறிவிப்புடன் ஒரு புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வெளியான ஒருசில நிமிடங்களில் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் ஹைத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More News

சுவாரஸ்யமின்றி திணறும் பிக்பாஸ்: இனியாவது தேறுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிய போகிறது. ஆனால் கமல் உள்பட இன்னும் ஒருவர் கூட பார்வையாளர்களின் மனதை தொட முடியவில்லை.

'சாமி 2' ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் தகவல்

விக்ரம், கீர்த்தி சுரேஷ், நடிப்பில் ஹரி இயக்கி வந்த 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது

நீ என்ன பெரிய இதுவா? வைஷ்ணவியின் உண்மை முகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் கூட பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை என்பது இந்த நிகழ்ச்சியின் துரதிஷ்டமாக பார்க்கப்படுகிறது

திமுகவில் குடும்ப சண்டை ஆரம்பமா?

ஒரு கட்சியின் தலைவர் மரணம் அடையும்போது அந்த கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பதில் குழப்பம் வருவது வழக்கமான ஒன்றே.

இன்று முதல் அஜித்தின் அடுத்த பட பணி ஆரம்பமா?

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.