யார் யாருக்கு என்ன விருது? அர்ச்சனா அட்வைஸ்க்கு பின் என்ன நடக்கும்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சன, அனைத்து போட்டியாளர்களிடம் கலகலப்பாக பேசிவிட்டு பின்னர் 10 நாட்களில் போட்டியாளர்கள் குறித்து மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை கூறுவதற்காக விருதுகளை கொடுத்தார்.

அந்த விருதில் பாலாஜி முருகதாசுக்கு ’சிம்ப்ளி வேஸ்ட்’ விருதும், ’சவாலான போட்டியாளர்’ என்ற விருதை ரம்யா பாண்டியன் மற்றும் ரியோவுக்கும் ’ஷோகேஸ் பொம்மை’ விருதை சம்யுக்தா மற்றும் சோம்சேகர் ஆகியோர்களுக்கும், ’அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்’ விருதை ஷிவானி மற்றும் வேல்முருகனுக்கும், ’நமத்து போன பட்டாசு’ விருது சனம்ஷெட்டி மற்றும் ஆரிக்கும், ’பிக்பாஸ்4 டிரெண்ட்’ விருது சுரேஷ் மற்றும் அனிதாவுக்கும், ’காணவில்லை’ விருது ஆஜித் மற்றும் கேப்ரில்லாவுக்கும், ’ஆமாம் சாமி’ விருது ரமேஷ் மற்றும் நிஷாவுக்கும் கொடுக்கப்பட்டது

இந்த விருதை ஒவ்வொருவருக்கும் கொடுத்த அர்ச்சனா, போட்டியாளர்களிடம் இதுவரை உள்ள குறை, நிறை ஆகியவற்றையும் கூறி போட்டியாளர்களிடம் சுதாரிப்பை ஏற்படுத்தியுள்ளார். இனிமேலாவாது ஆஜித், கேப்ரில்லா, ஆரி, சோம், ஷிவானி, வேல்முருகன் ஆகியோர் சுதாரிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்