தளபதி 64 படத்தின் அப்டேட்டை கேட்கும் 'தளபதி 63' தயாரிப்பாளர்!

  • IndiaGlitz, [Wednesday,December 04 2019]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் டெல்லி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மீண்டும் சென்னையில் இந்த படத்தின் ஒரு சிறிய ஷெட்யூல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் என விஜய் ரசிகர்கள் காத்திருப்பதோடு, அவ்வப்போது ‘தளபதி 64’ அப்டேட் எப்போது? என தயாரிப்பாளர் தரப்பினர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். அனேகமாக ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளிவர வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் தகவல்கள் கசிந்துள்ளது

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த 63வது படமான ’பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ‘தளபதி 64 படத்தின் மோஷன் போஸ்டர் அல்லது பர்ஸ்ட் லுக் தேதி அல்லது ஏதாவது ஒரு அப்டேட் உடனடியாக எங்களுக்கு வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்

’பிகில்’ படத்தை அர்ச்சனா கல்பாதி தயாரித்து கொண்டிருந்தபோது தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இதே போன்ற கேள்வியை அவரிடம் எழுப்பிய நிலையில் தற்போது அவர் பதிலுக்கு ‘தளபதி 64’ படத்தின் அப்டேட் வேண்டும் என்று ஒரு ரசிகையாக தனது வேண்டுகோளை எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் தேசிய விருது பெற்ற நடிகை?

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருவது தெரிந்ததே. அந்த வகையில் இயக்குனர்

ரஞ்சித் ஆக மாறும் அருண்விஜய்

நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் 'அக்னி சிறகுகள்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறார் கமலா ஹாரிஸ்..!

அமெரிக்க அதிபர் பதவி தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி செனட் சபை உறுப்பினரான கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்

தோழியின் கணவருடன் கள்ளக்காதல்: சென்னையில் நடந்த விபரீதம்!

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியின் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது

குழந்தைகள் சாப்பிடும் உணவில் இறந்து கிடந்த எலி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாஃபர்நகர் அரசு பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது