எல்லை மீறிய ரசிகர்கள்: அர்ச்சனா எடுத்த அதிர்ச்சி முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய அர்ச்சனா, வீட்டிற்கு வந்து முதல் வாரத்தில் இருந்து அனைத்து எபிசோடுகளையும் பார்த்திருப்பார் என தெரிகிறது. சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றிய விமர்சனத்திற்கு அவ்வப்போது பதில் கொடுத்து வருகிறார் என்பதில் இருந்தே இது உறுதியாகிறது.

இந்த நிலையில் அர்ச்சனாவின் அன்பை கேலி செய்யும் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றார்கள். ஒருசிலர் எல்லை மீறி அர்ச்சனாவின் அன்பை கிண்டல் செய்கிறார்கள். அர்ச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அவர் விதைத்து வைத்த அன்பு குரூப் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், இதற்கு முழு காரணம் அர்ச்சனா தான் என்றும் போட்டியாளர்கள் தனித்தன்மையுடன் விளையாடுவதை அவர்தான் கெடுத்து விட்டார் என்றும் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

பொதுவாக ஒரு போட்டியாளர் வெளியேறிவிட்டால் அவரைப் பற்றி ஒரு நாள் அல்லது இரண்டு நாளில் மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் அர்ச்சனாவை இன்னும் ஒரு சில ரசிகர்கள் மறக்காமல் வம்புக்கு இழுத்து கொண்டே உள்ளனர்.

இந்த நிலையில் அர்ச்சனா அதிரடியாக டுவிட்டரில் இருந்து தான் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இந்த அன்பினால் நான் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறேன் என்றும், வெறுப்பாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூற தனகு சோர்வாக உள்ளது என்றும் அவர் கூறிய தான் டுவிட்ட்ரிலிருந்து வெளியேறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எனது வெறுப்பாளர்கள் இதனை கொண்டாட தயாராகுங்கள் என்று கூறிய அர்ச்சனா, ஆனால் நான் மீண்டும் இதைவிட வலுவாக முன்னேறுவேன் என்றும் அவர் நம்பிக்கையும் கூறியுள்ளார். மேலும் இனிமேலாவது நீங்கள் கேலியும் கிண்டலும் செய்வதற்கு அடுத்த நபரை கண்டுபிடியுங்கள் என்றும் அவர் கூறி விட்டு டுவிட்டருக்கு ‘பை’ சொல்லியுள்ளார்.

More News

2021 இல் என்ன நடக்கும்??? கொரோனாவை கணித்த பாபா வங்காவின் கருத்து என்ன???

ஒட்டுமொத்த உலகத்திற்கும் 2020 ஆம் ஆண்டு ஒரு கெடுங்காலமாக மாறிவிட்டது. கொரோனா பரவல்

8 நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ்??? இளம் வயதினரை அதிகம் பாதிக்குமா???

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் 70% வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியது.

நேற்றைவிட இன்று நலமாக உள்ளார்: ரஜினி குறித்து அப்பல்லோ அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தம் மாற்றம் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

தமிழகத்தைப் பின்பற்றி 1 ரூபாய்க்கு உணவு… டெல்லியில் கலக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!!!

முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

21 வயதில் ஒரு மேயர்… இந்திய அளவில் சாதனை படைத்த கல்லூரி மாணவி!!!

அண்டை மாநிலமான கேரளாவில்  நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்று 21 வயதில் மேயர் பதவிக்கும் தேர்வாகி இருக்கிறார்