நாசாவிடம் இருந்து “சாதனை பட்டம்” வாங்கிய அரியலூர் அரசு பள்ளி ஆசிரியைகள்!

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

அரியலூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் விண்வெளியில் சுற்றித்திரியும் விண்கற்களை அடையாளம் கண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளனர். கூடவே அந்த விண்கற்களுக்கு பெயர் சூட்டும் வாய்ப்பையும் பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் செயல்பட்டு வரும் சிக்குரு கொலாப் நிறுவனம், விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் விண்கற்களை தினம்தோறும் ஆப்பிள் டெலஸ்கோப் வாயிலாக படமெடுத்து நாசா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும். இந்த புகைப்படங்களை நாசா நிறுவனம் ஆய்வுக்காக எடுத்துக் கொள்வதற்கு முன்பு டி.ஏ.எப்.இ மற்றும் பென்சீர் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி உண்மைத்தன்மையை அறிந்து கொள்கிறது.

அந்த வகையில் பெங்களூர் கொலாப் நிறுவனத்திடம் பயிற்சி எடுத்துக்கொண்ட அரியலூர் அரசு பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் தற்போது விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் 40 விண்கற்களை சரியாக அடையாளம் கண்டுபிடித்து ஆய்வறிக்கையை சமர்பித்து உள்ளனர்.

இதை சரிப்பார்த்த நாசா நிறுவனம் உண்மையில் அது விண்கற்கள்தான் என்பதை அறிந்து அரியலூர் மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை கவிதா மற்றும் கருப்பூர் சேனாதிபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண் ஆசிரியர் இருவருக்கும் சாதனை சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் அந்த விண்கற்களுக்கு பெயர் சூட்டும் வாய்ப்பையும் அவர்களுக்கே வழங்கியுள்ளது.

இதனால் நாசாவிடம் இருந்து சான்றிதழை பெற்ற அரசு பள்ளி ஆசிர்களுக்கு கல்வியாளர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

நடிகை காஜலின் மகிழ்ச்சி மந்திரம்? நீச்சல் குளத்தில் துள்ளிக் குதிக்கும் புகைப்படம் வைரல்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது

நான் யாரிடமும் 'சாரி' கேட்கவில்லை: மின் துறை அமைச்சருக்கு இயக்குனர் தங்கர்பச்சான் விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களின் உத்தரவின் பேரில் மின் வாரிய அதிகாரிகள் தங்கர்பச்சான் வீட்டிற்கு சென்றதாகவும் தங்கர்பச்சான் அளித்த புகார் குறித்து

வாய் தவறி பேசிவிட்டேன்: நீதிமன்றத்தில் மீராமிதுன் மனுதாக்கல்!

வாய் தவறி குறிப்பிட்ட சமுதாய குறித்து பேசி விட்டதாகவும் தன்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருப்பதாகவும் அதனால் தனக்கு ஜாமின் வேண்டும் என்றும் நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் 

கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்